Thursday, August 29, 2013

நினைவுகளின் பயணங்கள்


உன்னாலே தானே முதல்முறை துளிர்த்தேன்.. 
 
உனக்காகத் தானே உயிர் எல்லாம் பூத்தேன்.. 
 
உன் சுவாசம் சேர்க்க காற்றெல்லாம் அளைந்தேன்.. 
 
உன் நேசம் தேடியே உலகையே துளைத்தேன்.. 
 
உன் ஒளி தீண்டியே என்னையே உணர்ந்தேன்.. 
 
அடிவேரில் வெந்நீரும் 
 
     இதயத்தின் கண்ணீரும் 
 
           தந்தாயே முதன்முறை!!!.. 
 
என்றாலும் ஜீவனுள்
 
          உன் நிமிடங்களின் தடயங்கள்!!!..