Monday, February 18, 2013

அன்புச் சிறை

சின்ன சிரிப்பில்
   சிக்கிய சிந்தையும் 
ஒற்றை பார்வையில்
   வீழ்ந்த கண்களும் 
கனிந்த பேச்சில்
   கவிழ்ந்த இதயமும் 
மீண்டு வரவே
   விரும்ப வில்லையாம்...


உன் கேசம் கோதி

சிறைபட துடிக்கும் 

என் விரல்கள் போல!!!