Tuesday, September 13, 2011

உன் பார்வையில்

உன் உதடுகள் அசைவதைக் கொண்டே 
நீ என்னிடம் பேசுவதை உணர்கிறது 
உன் விழிகள் தீண்டிய கணமே 
நின்று போன என் உலகு.. 

Thursday, June 9, 2011

தொலைந்து போ அன்பே

பார்வைகள் தீண்டா தொலைவிலும்
       நீ நினைவுகளால் சுடுவதென்ன!!
வெளியில் துரத்தி வழிமறித்தாலும்
       உயிரில் பூக்கும் மாயமென்ன!!
கனவில்
    கவிதையில் தொலைந்த பிறகும்
        நீயென் முழுமையாய் நிறைவதேன்ன!!