Thursday, August 29, 2013

நினைவுகளின் பயணங்கள்


உன்னாலே தானே முதல்முறை துளிர்த்தேன்.. 
 
உனக்காகத் தானே உயிர் எல்லாம் பூத்தேன்.. 
 
உன் சுவாசம் சேர்க்க காற்றெல்லாம் அளைந்தேன்.. 
 
உன் நேசம் தேடியே உலகையே துளைத்தேன்.. 
 
உன் ஒளி தீண்டியே என்னையே உணர்ந்தேன்.. 
 
அடிவேரில் வெந்நீரும் 
 
     இதயத்தின் கண்ணீரும் 
 
           தந்தாயே முதன்முறை!!!.. 
 
என்றாலும் ஜீவனுள்
 
          உன் நிமிடங்களின் தடயங்கள்!!!..

Saturday, June 8, 2013

எனக்கான சூரியன்


சூரியன்  முகம் பார்த்தே தாமரை மலருமாம்..

நீ நம்பவில்லையா?

ஒருநாள் சிரித்துக்கொண்டே என் முகம் பார்

நிச்சயம் நம்புவாய் :)..
 
எனக்கான ஆதாரம் நீயேதான்  என்று..

Monday, February 18, 2013

அன்புச் சிறை

சின்ன சிரிப்பில்
   சிக்கிய சிந்தையும் 
ஒற்றை பார்வையில்
   வீழ்ந்த கண்களும் 
கனிந்த பேச்சில்
   கவிழ்ந்த இதயமும் 
மீண்டு வரவே
   விரும்ப வில்லையாம்...


உன் கேசம் கோதி

சிறைபட துடிக்கும் 

என் விரல்கள் போல!!!